பெட்ரோல் பங்கிற்குள் கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

 

பெட்ரோல் பங்கிற்குள் கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

கஞ்சா போதையில் வந்த ரவுடிக் கும்பல் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு ஆயுதங்களுடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆலப்பாக்கம்:  கஞ்சா போதையில் வந்த ரவுடிக் கும்பல் ஒன்று பெட்ரோல் பங்கிற்கு ஆயுதங்களுடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜீவ்காந்தி என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று சென்னை பெருங்களத்தூரை அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கிற்கு மணி என்ற ஆட்டோ டிரைவர், இருவருடன் வண்டிக்கு பெட்ரோல் போட வந்து தகராற்றில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை அங்கிருந்த ஊழியர்கள்  சிறைபிடித்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற மணி, சிறிது நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பலை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். 

petrol

மணியுடன் வந்த அந்த மர்மக்கும்பல் பட்டா கத்திகளுடன் வந்து இறங்கி பெட்ரோல் பங்கை அடித்து நொறுக்கியதுடன், சிறைபிடித்து இருவரையும் மீட்டு  சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.  இதுகுறித்து அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மணி உள்ளிட்ட 9 பேரைத் தேடி வருகின்றனர்.