பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! – டிடிவி தினகரனை சாடிய சுப.வீ

 

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! – டிடிவி தினகரனை சாடிய சுப.வீ

நக்கீரன் கோபால் கைதை வரவேற்ற டிடிவி தினகரனை பூனை என விமர்சித்துள்ளார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.

சென்னை: நக்கீரன் கோபால் கைதை வரவேற்ற டிடிவி தினகரனை பூனை என விமர்சித்துள்ளார் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்.

நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் கட்டுரை வெளியானதால் ஆளுநர் மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த இதழின் ஆசிரியர் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சட்டப்பிரிவு 124-A-ன் கீழ் அவர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மட்டும் வரவேற்றிருந்தார்.

இதுகுறித்து திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன், “நக்கீரன்கோபால் கைது தவறில்லை என்கிறார் டிடிவி.தினகரன். பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பாரே தந்தைபெரியார். அது இதுதானோ!” என தனது ட்விட்டரில் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்டிருந்த நக்கீரன் கோபால் மீது 124-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, நக்கீரன் கோபாலை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.