பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா உறுதி.. நகராட்சி முழுவதும் சீல்: மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

 

பூந்தமல்லியில் ஒருவருக்கு கொரோனா உறுதி.. நகராட்சி முழுவதும் சீல்: மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

இவர் வீட்டில் இருந்த போது பக்கத்து வீட்டில் இறந்தவர்களுடன் சீட்டு விளையாடியிருக்கிறார்.

பூந்தமல்லியை சேர்ந்த ஒருவர் இருங்காட்டுக்கோட்டையில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளார். இவர் வீட்டில் இருந்த போது பக்கத்து வீட்டில் இறந்தவர்களுடன் சீட்டு விளையாடியிருக்கிறார். அதனால் பக்கத்து வீட்டில் இருந்தவருக்கும் கொரோனா உறுதி அறிகுறி இருந்துள்ளது. 

ttn

இதனையடுத்து அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர் வசித்து வந்த வீட்டின் சுற்றப்புறத்தில் 5 கி.மீ அளவுக்கு சீல் வைக்கப்பட்டு பூந்தமல்லிக்கு வரும் வழியிலும் வெளியே செல்லும் வழியிலும் இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், நகராட்சிக்கு உட்படுத்தப்பட்ட 21 வார்டுகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடன் விளையாடிய நபர்களுள் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, அந்த பகுதி முழுவதும் தினமும் 3 முறை கிருமி நாசினி மற்றும் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன.