பூஜையுடன் தொடங்கியது அதர்வா-அனுபமாவின் படப்பிடிப்பு! 

 

பூஜையுடன் தொடங்கியது அதர்வா-அனுபமாவின் படப்பிடிப்பு! 

அதர்வா-அனுபமா இணைந்து நடிக்கவுள்ள படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. 

பூஜையுடன் தொடங்கியது அதர்வா-அனுபமாவின் படப்பிடிப்பு! 

சென்னை:  அதர்வா-அனுபமா இணைந்து நடிக்கவுள்ள படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

நடிகர் அதர்வா 100 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பூமராங் பட இயக்குநர் கண்ணன் படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பிரேமம்,கொடி உள்ளிட்ட படங்களில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தெலுங்கில் நானி-நிவேதா தாமஸ் நடிப்பில் வெளியாகி  சூப்பர் ஹிட்டான நின்னு கோரி படத்தை கண்ணன் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் பூஜையடன் தொடங்கியுள்ளது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழுவினர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். மேலும் படத்தை பற்றிய மற்ற அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.