புலியை பார்த்ததும் பிணம் போல படுத்துக்கொண்ட நபர்…பதற வைக்கும் வீடியோ!

 

புலியை பார்த்ததும் பிணம் போல படுத்துக்கொண்ட நபர்…பதற வைக்கும் வீடியோ!

இதை கண்டு அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு கத்தினர். சிலர் மரத்தின் மீது அமர்ந்துகொண்டு கத்தினர்.

கடந்த 25 ஆம் தேதி மும்பை அருகே உள்ள பாந்தரா மாவட்டத்தில் உள்ள ஒரு வயல்வெளியில் புலி ஒன்று புகுந்தது. அப்போது அங்கிருந்த ஒருவரை அது தாக்க  முற்பட்டது.  

ttn

புலியை  கண்ட அந்த நபர் சாதுரியமாகத் தரையில் படுத்துக்கொண்டார். இதை பார்த்த புலி, அவரது பக்கத்தில் அமர்ந்து அவரையே உற்றுநோக்கிக்கொண்டிருந்தது. இதை கண்டு அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டு கத்தினர். சிலர் மரத்தின் மீது அமர்ந்துகொண்டு கத்தினர்.

சத்தத்தைக் கேட்டு மிரண்ட  புலி, செய்வது அறியாமல் அப்படியே சற்று நேரம் அமர்ந்திருந்தது. இதனால் சிலர் புலியை  நோக்கி ஓடினர். இதனால்  அந்தப் புலி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. அதன்பின்னர் படுத்திருந்த நபர் அசால்ட்டாக எழுந்து நடந்து சென்றார். இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோவானது  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.