புலம்பும் கோலிவுட்: கண்டுகொள்ளாத சௌந்தர்யா

 

புலம்பும் கோலிவுட்: கண்டுகொள்ளாத சௌந்தர்யா

சௌந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையை தொலைக்காட்சி சீரியலாக எடுக்க இருப்பதாக அறிவித்ததிலிருந்து கோடம்பக்கத்தில் பலத்த முணுமுணுப்புகள் எழும்ப ஆரம்பித்து விட்டன

சென்னை: சௌந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையை தொலைக்காட்சி சீரியலாக எடுக்க இருப்பதாக அறிவித்ததிலிருந்து கோடம்பக்கத்தில் பலத்த முணுமுணுப்புகள் எழும்ப ஆரம்பித்து விட்டன.

மணிரத்னம் முன்னதாகவே இந்தக் கதையை எடுக்க திட்டமிட்டு பணிகளை தொடங்கியிருக்கிறார். இந்த நேரத்தில் சௌந்தர்யாவின் அறிவிப்பு பொன்னியின் செல்வன் கதையை நேசிப்பவர்களுக்கும், மணிரத்னம் படத்தின் நேர்த்தியை விரும்புவார்களுக்கும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காரணம் இதற்கு முன் சௌந்தர்யா பட தயாரிப்பில் ஈடுபட்டபோது ஏற்பட்ட குளறுபடிகளால் கோச்சடையான் படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல, இந்தப் படத்திற்கும் அமைந்து விடக்கூடாது என்பதுதான் அவர்களின் கவலை. ஆனால் சௌந்தர்யா நடிகர்களை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

தெலுங்கில் மட்டும் ஐந்து ஹீரோக்களிடம் கதை குறித்து பேசியிருக்கிறார்.தமிழிலும் ஹீரிக்களிடமும் பேசியிருக்கிறார். இதில் சரத்குமார்முக்கிய வேட்த்தில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த தகவலால் விஐபிகள் பலரும் சௌந்தர்யாவுக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். எம்.ஜி.ஆர். எடுக்க முயன்ற விஷயத்தை எடுத்திருப்பதால் இதில் நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று பலரும் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.