புற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த உருக்கமான பதிவு!
புற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களுக்கு உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மும்பை: புற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களுக்கு உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் சமீபகாலமாக நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இர்ஃபான் நோயுற்றதைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் அவர் பூரண குணமுடைய பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வந்தனர். சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கடந்த மாதம் தாயகம் திருப்பினார். அப்போது விமானநிலையத்தில் முகத்தை மறைத்து கொண்டு சென்ற இர்ஃபான் கானின் புகைப்படம் இணையத்தில் வைரலானது
இந்நிலையில் இர்ஃபான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ வெற்றி பெறுவதி நாம் நேசிக்கப்படுவதை மறந்து விடுகிறோம். சோதனை காலத்தில் தான் அது நமக்கு தெரியவருகிறது. இந்த வாழ்க்கையில் எனது பாதத் தடங்களை விட்டுச் செல்வதற்கு முன் உங்களுடைய அன்பிற்கும், அக்கறைக்கும் நன்றியுள்ளவனாக இருக்க கடமைப்பட்டுள்ளேன். அதுவே என்னை குணமடையத் தூண்டியது. நான் மீண்டும் உங்களுடன் பயணிக்கவுள்ளேன். என் இதயத்திலிருந்து உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
— Irrfan (@irrfank) April 3, 2019
நடிகர் இர்ஃபான் கான் ‘தி லஞ்ச் பாக்ஸ்’, ‘லைஃப் ஆஃப் பை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்க: துரைமுருகன் வீட்டில் ரெய்டுக்கு காரணம் கேப்டன்!? சவால் விட்ட விஜய் பிரபாகரன்