புரட்டாசி 3வது சனிக்கிழமை : தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம்

 

புரட்டாசி 3வது சனிக்கிழமை : தமிழகத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் தரிசனம்

புரட்டாசி 3 ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

புரட்டாசி மாத சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னையில் உள்ள பார்த்த சாரதி கோயில்,தி. நகர் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்,கோயம்பேடு வைகுண்ட வாச பெருமாள் கோயில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

perumaal

புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்காரமும் நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ வைகுண்டம்,காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில்,மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில்,அழகர் கோயில் கள்ளழகர் பெருமாள் கோயில் ஆகிய முக்கிய வைணவ கோயில்களில் இன்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பெருமாளை வழிபட்டனர்.

மேலும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் லட்சுமி நாரணூயண சீனிவாசப்பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு,சுவாமி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். 

perumaaljkl

பாப்பநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள், சித்தாபுதுார் ஜெகன்நாதபெருமாள், உக்கடம் லட்சுமிநரசிம்மர், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, கோட்டைமேட்டிலுள்ள கரிவரதராஜ பெருமாள்.

பேரூர் பச்சாபாளையத்திலுள்ள தசாவதாரபெருமாள், கோவைப்புதூரிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.