புயல் பாதித்த மக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்!

 

புயல் பாதித்த மக்களுக்கு இலவசமாக வீடுகளை கட்டிக்கொடுத்த நடிகர் ரஜினிகாந்த்!

நாகை மாவடட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். 

நாகை மாவடட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு 18 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளார். 

Rajinikanth
 
கடந்த ஆண்டு இறுதியில் ஏற்பட்ட கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை, தஞ்சை ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் நாகை மாவட்டத்தில் கோடியக்கரை, தலைஞாயிறு ஆகிய இடங்களில் வீடுகளை இழந்து தவித்த 10 குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் மூலம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தனர். அதற்கான முழுத் தொகையையும் நடிகர் ரஜினிகாந்த் வழங்கியிருந்தார். 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 10 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் விழா வரும் 22-ம் தேதி நாகையில் நடைபெறுகிறது.