‘புன்னகை மன்னன்’ பாணியில் காதலர் தினத்தன்று தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!

 

‘புன்னகை மன்னன்’ பாணியில் காதலர் தினத்தன்று தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடி!

பின்னர் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மைசூர் மாவட்டம் யமகும்பா பகுதியைச் சேர்ந்தவர் சிந்து ஸ்ரீ. இவர் அதேபகுதியைச் சேர்ந்த சச்சின் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின்  காதலுக்கு சிந்து ஸ்ரீ வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் சிந்துஸ்ரீக்கு  அவசர அவசரமாக மாப்பிள்ளை  பார்த்ததுடன்  அவருக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

ttn

இதுகுறித்து காதலன் சச்சினுக்கு தகவல் கூறிய சிந்து ஸ்ரீ அவருடன் வீட்டை விட்டு வெளியேறி குடகு மாவட்டத்தில் உள்ள ஹாரங்கி அணைக்கு சென்றுள்ளார். பின்னர் காதல் ஜோடி இருவரும் அந்த பகுதியை சுற்றிப்பார்த்து மகிழ்ந்துள்ளனர். காதலர் தினமான நேற்று மகிழ்ச்சியாக இருந்த அந்த ஜோடி. சாவிலாவது ஒன்றாக இருப்போம் என்று முடிவு செய்து  நீர்த்தேக்க பகுதியிலிருந்து ஜோடியாக குதித்து விட்டனர். 

ttn

இதுகுறித்து  போலீசாருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 1 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு இருவரின் சடலமும் மீட்கப்பட்டது. இதை  தொடர்ந்து தகவலறிந்து வந்த சிந்து ஸ்ரீ மற்றும் சச்சின் குடும்பத்தினர் அவர்களின் உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து  வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதிக்கு வந்த மற்ற சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.