புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாயார் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

 

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாயார் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாயார் மறைவை தொடர்ந்து, அவரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தாயார் மறைவை தொடர்ந்து, அவரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள் (96), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் சொந்த ஊரான பூரணாங்குப்பத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், நாராயணசாமியின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்து கொள்கிறேன். தாய் மறைவு அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு கொண்டிருந்ததால் அப்போது இங்கு வர முடியவில்லை என்றார்.