புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

 

புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் , அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும்  புதுச்சேரி, சென்னை, நீலகிரி, கோவை, தேனி, காஞ்சிபுரம், விழுப்புரம்,  கடலூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும்  தெரிவித்தார். புதுச்சேரியிலும் நிற்காமல்  கனமழை பெய்து வருவதால்  புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை (2.12.2019) விடுமுறை என்று புதுச்சேரி கல்வித் துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.