புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி : சுகாதாரத்துறை தகவல்!

 

புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி : சுகாதாரத்துறை தகவல்!

தென்னிந்தியாவிலேயே கொரோனா வைரஸ் குறைவாக பரவியுள்ள பகுதியாக புதுச்சேரி இருக்கிறது.

இந்திய மக்களை கொரோனாவில் இருந்து காக்க கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஊரடங்கால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915 ஆக உயர்ந்துள்ள நிலையில், அதில் பெரும்பான்மையான மக்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தான். 

ttn

தென்னிந்தியாவிலேயே கொரோனா வைரஸ் குறைவாக பரவியுள்ள பகுதியாக புதுச்சேரி இருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக இருந்த நிலையில், நேற்று மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனாவுக்கு புதுச்சேரி மாநிலத்தில் முதல் பலி நிகழந்துள்ளது. மாஹே பகுதியை சேர்ந்த 71 வயது முதியவர், கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளதாக புதுச்சேரி சுகாதார துறை தெரிவித்துள்ளது.