புதிய சேனலில் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியா? லட்சுமி ராமகிருஷ்ணன் விளக்கம்!
புதிய சேனலில் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக வெளியான தகவலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
சென்னை: புதிய சேனலில் மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக வெளியான தகவலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை . இதில் பொது மக்களின் உண்மையான வாழ்க்கைக் கதைகளை மையமாக வைத்து அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கொடுத்து உதவுகிறது. இதை நடிகை மற்றும் இயக்குநரான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
எல்லோரிடமும் பரவலாகச் சென்றடைந்த இந்த நிகழ்ச்சி குறித்து எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகினார். அவருக்குப் பதிலாக நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி முன்பு போல் வரவேற்பைப் பெறவில்லை என்பதால் மொத்தமாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதிய சேனலில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நடத்தப் போகிறார் லட்சுமி ராமகிருஷ்ணன் எனத் தகவல் பரவியது. ஆனால், அது பொய்யான தகவல் என அவர் மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில், ‘வேறொரு சேனலில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்காக நான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக வதந்திகள் உலவுகின்றன. வேறெந்த சேனலிலும் நான் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நடத்தப்போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.
There is a rumour that I have signed up to do #Sollvathellamunmai for another channel, i clarify that I will not be hosting #SU for any other channel. I did my best for the show & it is over, wonderful tenure with @ZeeTamil ? am approached by other channels but will not do #SU
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) March 9, 2019
அந்த நிகழ்ச்சிக்காக என்னால் முடிந்த சிறந்த பணியைச் செய்தேன். அந்த நிகழ்ச்சி முடிந்துவிட்டது. ஜீ தமிழுடன் அற்புதமான காலம். மற்ற சேனல்கள் என்னை அணுகுகின்றனர். ஆனால், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை நான் நடத்தமாட்டேன்’ என அதில் பதிவிட்டுள்ளார்.