புதிய உச்சத்தை தொட்டு விட்டு மளமளவென சரிவை சந்தித்த சென்செக்ஸ்

 

புதிய உச்சத்தை தொட்டு விட்டு மளமளவென சரிவை சந்தித்த சென்செக்ஸ்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 68 புள்ளிகள் வீழ்ந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புதான் இதற்கு முக்கிய காரணம். தொடக்கத்தில் மளமளவென ஏற்றம் கண்ட பங்கு வர்த்தகம் பின்பு சரிவு காண தொடங்கியது. இறுதியில் இன்று பங்கு வர்த்தகம் சரிவுடன்  முடிவடைந்தது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவன பங்குகளில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐ.டி.சி. மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி உள்பட 9 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. பார்தி ஏர்டெல், பவர்கிரிட், சன்பார்மா, மகிந்திரா அண்டு மகிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் உள்பட 21 நிறுவன பங்குகளின் விலை சரிந்தது.

ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,118 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,411 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 178 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.153.70 லட்சம் கோடியாக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தை

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 67.93 புள்ளிகள் வீழ்ந்து 40,821.30 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 36.05 புள்ளிகள் சரிந்து 12,037.70 புள்ளிகளில் முடிவுற்றது.