புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்! 

 

புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்! 

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

சென்னை: மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற நடிகை நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.

ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். அதையடுத்து தனது இயல்பான நடிப்பின் மூலம் பல படங்களில் கமிட்டாகி தற்போது பிஸியாக நடித்து வருகிறார். 

nivetha pethuraj

இந்நிலையில் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் பொற்றாமரைக்குலத்தில் அமர்ந்து புகைப்படங்களும், கோவில் உள்ளே உள்ள வளையல் கடையில் ஷாப்பிங் செய்த வீடியோக்களையும் தனது சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

செல்போன் கொண்டு செல்வதற்கான நீதிமன்ற தடை அமலில் இருக்கும் நிலையில் நடிகை என்பதால் நிவேதிதாவிற்கு மட்டும் சலுகை காட்டப்பட்டிருப்பது பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து செல்போனை எடுத்துச் சென்ற நிவேதா பெத்துராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.