புகழ்ந்து பேசிய சிரஞ்சீவி: மேடையில் ‘சடாரென்று’ காலில் விழுந்த விஜய் சேதுபதி

 

புகழ்ந்து பேசிய சிரஞ்சீவி: மேடையில் ‘சடாரென்று’ காலில்  விழுந்த விஜய் சேதுபதி

சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று நடிகர் சிரஞ்சீவி புகழ்ந்துள்ளார். 

ஹைதராபாத்: ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக்கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று நடிகர் சிரஞ்சீவி புகழ்ந்துள்ளார். 

chiran

தெலுங்கில் சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படத்தில் விஜய் சேதுபதி, அனுஷ்கா, அமிதாப் பச்சன் , நயன்தாரா, தமன்னா ,  சுதீப், ஜகபதி பாபு, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை  வாழ்க்கை  வரலாற்றுப் படமான இதில் விஜய் சேதுபதி  ராஜபாண்டி எனும் தமிழ் மன்னனின் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.  

chiranjeevi

இந்நிலையில்  ஹைதராபாத்தில் படத்தின் புரேமோஷன் நிகழ்ச்சி ஒன்று  நடைபெற்றது. அதில் நடிகர்கள் சிரஞ்சீவி, விஜய் சேதுபதி, ராம் சரண், பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் நடிகர்  சிரஞ்சீவி  விஜய் சேதுபதி குறித்துப் பேசும் போது,  விஜய் சேதுபதி பிஸியான நடிகர். அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி. அவர் என் மீது  வைத்துள்ளார். என்னை அண்ணா என்று தான் அழைப்பார்’ என்றார். இதைக் கேட்ட விஜய் சேதுபதி சிரஞ்சீவி காலில்  விழுந்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத சீரஞ்சீவி உள்பட மேடையிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்குச் சலசலப்பு ஏற்பட்டது.