பிளாஸ்டிக் மட்டுமல்ல… கட்டைப் பைகளுக்கும் தடை! மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களையும், பிளாஸ்டிக் பேக்குகளையும் பயன்படுத்த தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டது என்றும் இந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி 1 முதல் அமலில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களையும், பிளாஸ்டிக் பேக்குகளையும் பயன்படுத்த தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டது என்றும் இந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி 1 முதல் அமலில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாணையில் கார்பனேட் பைகள் எனப்படும் கட்டைப் பைகளும் கடந்த டிசம்பரில் சேர்க்கப்பட்டன என தெரிவித்துள்ள அவர், கட்டைப்பைகள் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நலன் கருதியே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், மனுதாரர் கோரிக்கை ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.