பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வராத காதலன் : தூக்கில் தொங்கிய பெண் போலீஸ்!

 

பிறந்தநாளுக்கு கேக் வெட்ட வராத காதலன் : தூக்கில் தொங்கிய பெண் போலீஸ்!

ஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும்  தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணிபுரியும்  ஏழுமலை என்பவரும் காதலித்து வந்துள்ளனர். 

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. 21 வயதான இவர் ரயில்வே பெண் காவலராக பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக  தடுப்பு பணியில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவரும்  தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணிபுரியும்  ஏழுமலை என்பவரும் காதலித்து வந்துள்ளனர். 

rr

நேற்று ஏழுமலைக்கு பிறந்தநாள் என்று தெரிகிறது. ஊரடங்கிலும் கஷ்டப்பட்டு கேக் வாங்கிய  சரண்யா ஏழுமலைக்காக அயனாவரம் வீட்டின் அருகே காத்திருந்துள்ளார். ஆனால் ஏழுமலை வரவில்லை என்று கூறப்படுகிறது.  இதனால் அவருக்கு போன் செய்து சரண்யா சண்டை  போட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. 

ff

 
இந்நிலையில் மனமுடைந்த  சரண்யா  வீட்டில் துப்பட்டவால் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து தகவலறிந்த  ஓட்டேரி போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.