பிரியங்கா பற்றி சு.சாமி அநாகரிக பேச்சு: நடவடிக்கை எடுக்குமா பாஜக?

 

பிரியங்கா பற்றி சு.சாமி அநாகரிக பேச்சு: நடவடிக்கை எடுக்குமா பாஜக?

பிரியங்கா காந்தி குறித்து கேட்டதற்கு அநாகரிகமாக பதில் அளித்திருக்கிறார் பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி.

புதுடெல்லி: பிரியங்கா காந்தி குறித்து கேட்டதற்கு அநாகரிகமாக பதில் அளித்திருக்கிறார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

அநாகரிகமாய் பேசுவதில் கைதேர்ந்தவர் பாஜக தலைவர் சு.சாமி, தனது கட்சி மற்றும் கொள்கைகளுக்கு எதிராய் இருப்பவர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தனி மனித தாக்குதலில் ஈடுபடுவதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார்.

பிரியங்கா காந்தி உத்திர பிரதேசத்தின் கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். சு.சாமி ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்துக்கு  சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பிரியங்கா பற்றி கேள்வி எழுப்பப்பட்டதற்கு, “பிரியங்கா மனநோயாளி (Bipolar disorder), இந்த நோய் அவரின் வன்முறை குணத்தை வெளிப்படுத்திவிடும். அவர் பொது இடங்களில் மக்களை தாக்கவும் யோசிக்கமாட்டார்” என கருத்து தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி பொது இடத்தில் மக்களை தாக்கியதாக எந்த தகவலும் இல்லை. வாய்க்கு வந்ததை உளறும் சு.சாமி மீது அவர் கட்சி நடவடிக்கை எடுக்குமா இல்லை பாஜக கட்சியின் நிலைப்பாடே தனி மனித தாக்குதானா என்ற கேள்வி எழுகிறது.