பிரம்மாண்ட இயக்குநருக்கு பாராட்டு விழா நடத்திய முன்னணி இயக்குநர்கள்: வைரல் புகைப்படம்!

 

பிரம்மாண்ட இயக்குநருக்கு பாராட்டு விழா நடத்திய முன்னணி இயக்குநர்கள்: வைரல் புகைப்படம்!

திரைத் துறைக்கு வந்து  25 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் ஷங்கருக்கு பாராட்டு ஒன்றைச் சென்னையில் நடத்தியுள்ளனர்.  

சென்னை:  திரைத் துறைக்கு வந்து  25 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் ஷங்கருக்கு பாராட்டு ஒன்றைச் சென்னையில் நடத்தியுள்ளனர்.  

பிரம்மாண்ட  இயக்குநர்

shankar

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட  இயக்குநர்  என்ற பெயர் பெற்றவர் இயக்குநர்  ஷங்கர்.  இவரது படங்களில் எந்தளவிற்குப் பிரம்மாண்டம் உள்ளதோ, அதே அளவு வணிகத்திலும் மிகப்பெரிய வசூலை வாரி குவிக்கும். தமிழ் சினிமாவை எந்திரன், 2.0 போன்ற படங்களின் மூலம் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றவர் ஷங்கர். இவரிடம் உதவி இயக்குநர்களாக  இருந்தவர்கள் தான் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக  வலம் வரும், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன், அட்லி போன்றோர். 

 ‘ஷங்கர் 25’

shankar

இந்நிலையில் ஷங்கர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது இயக்குநர்கள் வட்டாரம்.    ‘ஷங்கர் 25’ எனப் பெயரில்  அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட விழாவில் மூத்த இயக்குநர்களிலிருந்து இளம் இயக்குநர்கள் வரைக்கும் நேரில் வந்து அவரைப் பாராட்டி மகிழ்ந்துள்ளனர்.

மூத்த இயக்குநர்கள்  இளம் இயக்குநர்கள்  வரை…

shankar

 

இயக்குநர் மிஷ்கின் ஒருங்கிணைத்து நடத்திய    ‘ஷங்கர் 25′  நிகழ்ச்சியில்,  மணிரத்னம், லிங்குசாமி, சசி, அட்லீ, வசந்தபாலன், ரஞ்சித், பாலாஜி சக்தி வேல், பாண்டிராஜ் மற்றும் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள்  பங்கேற்றனர். மேலும் இவர்கள் அனைவரும்  நீல நிறத்தில் ’S25’ என்கிற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்த டி-ஷர்ட்டை அணிந்து ஷங்கரை கௌரவித்தனர். விழாவில் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

ஷங்கருக்காக இது போன்ற மற்றொரு பாராட்டு விழாவைக் கடந்த வருடம் ஆகஸ்ட்டில் இயக்குநர்கள் ஒரு நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: STR 45: சிம்புவுடன் இணைந்த கவுதம் கார்த்திக்! உற்சாகத்தில் ரசிகர்கள்!