பிரபல பின்னணி பாடகி தூக்கிட்டு தற்கொலை: “எனது மரணத்திற்குக் காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள்” என வாட்ஸ் அப் மெசேஜ்!

 

பிரபல பின்னணி பாடகி தூக்கிட்டு தற்கொலை: “எனது மரணத்திற்குக் காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள்” என வாட்ஸ் அப் மெசேஜ்!

அன்னபூர்னேஸ்வரி நகரில் உள்ள தாய்வீட்டுக்கு வந்து விட்டார். இருப்பினும்  சுஷ்மிதா தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

கன்னட சினிமாவின்  பிரபல பின்னணி பாடகி  சுஷ்மிதா. இவர் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு சரத் என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயரை  திருமணம் செய்துள்ளார்.  இதையடுத்து கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகளவு  வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் சுஷ்மிதா கணவருடன் கோபித்துக்கொண்டு அன்னபூர்னேஸ்வரி நகரில் உள்ள தாய்வீட்டுக்கு வந்து விட்டார். இருப்பினும்  சுஷ்மிதா தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 

tn

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, தனது தாய்வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கான காரணம்  குறித்து சுஷ்மிதா தனது சகோதரர்  சச்சினுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளார். 

ttn

அதில், ‘எனது சாவுக்கு காரணம் என்னுடைய கணவர் சரத், வைதேகி மற்றும் கீதா ஆகியோர் தான் . நான் அவர்களின் கால்களை பிடித்து கெஞ்சியும் கூட அவர்கள் என்மீதான வன்முறையை நிறுத்தவில்லை. எனக்கு நாளுக்கு நாள் அதிகமாக கொடுமை செய்தார்கள். என் கணவர் மாமியார் பேச்சை கேட்டுக்கொண்டு தினமும் என்னை கொடுமை செய்து வந்தார். தினமும் என்னை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறி  தொந்தரவு செய்தனர். நான் இதையெல்லாம் யாரிடமும் கூறவில்லை. அம்மா என் மரணம் உங்களுக்கு வேதனையளிக்கலாம். என்னை மணித்துவிடுங்கள். எனது மரணத்திற்குக் காரணமான யாரையும் விட்டு விடாதீர்கள்’ என குறிப்பிட்டுள்ளார். 

ttn

சுஷ்மிதாவின் வாட்ஸ்அப் தகவலின் படி   அன்னபூர்னேஸ்வரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சரத் மற்றும் அவரின் குடும்பத்தினரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.