பிரபல நடிகையை காண வீட்டைவிட்டு வந்து 5 நாட்களாக தெருவில் தூங்கிய ரசிகர்…கடைசியில் நடிகை செய்த காரியத்தை பாருங்க!

 

பிரபல நடிகையை காண வீட்டைவிட்டு வந்து 5 நாட்களாக தெருவில் தூங்கிய ரசிகர்…கடைசியில் நடிகை செய்த காரியத்தை பாருங்க!

தமிழில் ஒரு படத்துடன் ஓரங்கட்டிய இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான திரைப்படம்  ‘முகமூடி. இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . தமிழில் ஒரு படத்துடன் ஓரங்கட்டிய இவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார்.

 

குறிப்பாகத் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன்  ஜோடி சேர்ந்துள்ள பூஜா, அங்கு கோடிகளில் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. 

 


 

இந்நிலையில் பாஸ்கர் ராவ் என்ற ரசிகர்கள் பூஜாவை சந்திக்க ஆந்திராவிலிருந்து மும்பைக்கு வந்துள்ளார். பூஜாவை பார்க்கமுடியாததால் 5 நாட்களாக சாலையில் படுத்து  தூங்கிய அவரை பற்றி அறிந்த பூஜா ஹெக்டே அவரை சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நீங்கள் கஷ்டப்படுவது எனக்கு வருத்தமளிக்கிறது. நீங்கள் தெருவில் தூங்குவதை நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அன்பை நான் உணர்வேன். என்னுடைய பலமே நீங்கள் தான்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

முன்னதாக பூஜா ஹெக்டே அடுத்ததாக பிரபாஸுடன் இணைந்து  ஜான் படத்தில் நடிக்கிறார். தெலுங்கு மற்றும் இந்தியில்  உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு  இத்தாலி மற்றும் ஹைதராபாத்தில் நடக்கவுள்ளது  குறிப்பிடத்தக்கது.