பிரபல நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்

 

பிரபல நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுக்காக பிரபல நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது

நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சைக்குரிய பதிவுக்காக பிரபல நடிகர் விவேக் ஓபராய்க்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது

மக்களவைத்தேர்தல் வாக்கு கணிப்புகளுடன் ஒப்பிட்டு நடிகர் சல்மான் கான் ஐஸ்வர்யா ராய் இணைந்து எடுத்த படம், தன்னுடன் ஐஸ்வர்யா ராய் எடுத்தப்படம் மற்றும் கணவர் அபிஷேக் பச்சன், மக்கள் ஆராத்யாவுடன் எடுத்தப்படம் ஆகியவற்றை இணைத்து விவேக் ஓபராய் அவரது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய மீம் ஒன்றை பதிவிட்டிருந்தர். அதில் கருத்துகணிப்பு, வாக்கு கணிப்பு, தேர்தல் முடிவு என அவர் குறிப்பிட்டிருந்தார். 

ஐஸ்வர்யா ராயின் கடந்த கால வாழ்க்கையை விமர்சிக்கும் வகையில் விவேக் ஓபராய் இந்த பதிவை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பதிவுக்கு சமூக வலைதளத்திலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையமும், மகாராஷ்டிர மகளிர் ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியுள்ளன. இதனிடையே தாம் வெளிட்ட பதிவு தேவையில்லாமல் அரசியலாக்கப்படுவதாக விவேக் தெரிவித்துள்ளார்.