பிரபல நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகார்: விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
நடிகை நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் நடிகர் நானா படேகருக்கு மகாராஷ்டிரா மகளீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பை: நடிகை நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் நடிகர் நானா படேகருக்கு மகாராஷ்டிரா மகளீர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் கடந்த 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை தனுஸ்ரீ தத்தா குற்றம்சாட்டியிருந்தார்.
அதுமட்டுமின்றி, இதுகுறித்து புகார் அளித்த போது, தனது அரசியல் செல்வாக்கை வைத்து நானா படேகர் மிரட்டியதாகவும் தனுஸ்ரீ தத்தா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனுஸ்ரீ தத்தா சார்பில் மகாராஷ்டிரா மகளிர் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் நானா படேகரிடம் விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமின்றி, தனுஸ்ரீ கொடுத்த புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என விளக்கம் கேட்டு மகாராஷ்டிரா சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் கூட்டமைப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.