பிரபல திரையரங்கில் வெளியாகி ஏழே நாளான ‘பிகில்’ பட காட்சி ரத்து ..!

 

பிரபல திரையரங்கில் வெளியாகி ஏழே நாளான ‘பிகில்’ பட காட்சி ரத்து ..!

விஜய்- நயன்தாரா  நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான பிகில் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விஜய்- நயன்தாரா  நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான பிகில் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கால் பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படத்தை பார்க்க முதல் 3 நாட்களில் டிக்கெட் கிடைக்காமல் பல ரசிகர்கள் அல்லாடினர். டிக்கெட் கிடைக்காததால் சிலர் ரூ.800, ரூ.1000 என அதிக பணம் செலுத்தி பிகில் படத்தைப் பார்த்தனர். இப்படம் ரிலீஸ் ஆன முதல் மூன்று நாட்கள் பண்டிகை நாட்கள் என்பதால் எதிர்பார்த்ததை விட தியேட்டர்களில் அதிக கூட்டம் குவிந்தது. 

Bigil

தீபாவளி கொண்டாட்டம் முடிந்து அனைவரும் வேலைக்குத் திரும்பியுள்ளனர். வார நாட்களில் பெரும்பாலும் யாரும் படம் பார்க்க செல்ல மாட்டார்கள். வாரக் கடைசியிலேயே தியேட்டர்களில்  கூட்டம் அதிகமாக இருக்கும். பிகில் படம் ரிலீஸ் ஆகி 7 நாட்களே ஆன நிலையில், சென்னையில் இயங்கி வரும் பிரபல திரையரங்கான தேவி பாரடைஸில் கூட்டம் அதிகமாக வராததால் ‘பிகில்’ படத்தின் மதியக் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Devi theater

இது குறித்துப் பேசிய, தியேட்டர் உரிமையாளர், ‘தேவி தியேட்டரில் உள்ள 4 திரையில், 2 திரைகளில் பிகில் திரையிடப்பட்டு வந்தது. வார நாட்களில் கூட்டம் வராததால், தற்போது 1 திரையில் மட்டுமே பிகில் படம் திரையிடப்படுகிறது. பிகில் மட்டுமல்லாது எல்லா திரைப்படங்களுக்கும் இதே நிலை தான் நீடிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.