பிரபல கிரிக்கெட் வீரருக்கு சூர்யா சொன்ன சீக்ரெட்

 

பிரபல கிரிக்கெட் வீரருக்கு சூர்யா சொன்ன சீக்ரெட்

நடிகர் சூர்யா இம்மாத இறுதியில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ பட புரமோஷன் தொடர்பாக நேரலையில் பங்கேற்றபோது சற்றும் எதிர்பாராத வகையில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா ஆஜராகி அதிர்ச்சி அளித்தார்.

நடிகர் சூர்யா இம்மாத இறுதியில் வெளியாகவிருக்கும் ‘என்.ஜி.கே’ பட புரமோஷன் தொடர்பாக நேரலையில் பங்கேற்றபோது சற்றும் எதிர்பாராத வகையில் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா ஆஜராகி அதிர்ச்சி அளித்தார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படம் `என்ஜிகே’. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வருகிற 31ம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் ட்விட்டர் நேரலையில் சூர்யா உரையாடுவார் என்று தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் சூர்யாவிடம் கேள்வி கேட்டார்.

raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என்று சுரேஷ் ரெய்னா கேட்க, அதற்கு சூர்யா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். மேலும் சுரேஷ் ரெய்னா கேள்வி கேட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.உங்களுடன் நான் எடுத்துக்கொண்ட புகைப்படம் அப்படியே இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது’ என்று சூர்யா கூறினார்.