பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், உடல் உறுப்பு தான விழிப்புணர்வில் தமிழக சுகாதாரத்துறை கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தமிழக சுகாதாரத்துறைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நகர்ப்புறங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் காய்ச்சல், நோய் தடுப்பில் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பிறகும் இறப்பு சதவீதம் தமிழகத்தில் குறைந்துள்ளது. உடனடியாக சிகிச்சை அளிக்கும் விதமாக பல்வேறு இடங்களில் விபத்து சிகிச்சை மையம் தொடங்கப்படும் என்றார்.