பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட்; ரயில்வே ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்!

 

பிரதமர் மோடி படத்துடன் ரயில் டிக்கெட்; ரயில்வே ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்!

பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மத்திய அரசின் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தும் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது

லக்னோ: பிரதமர்  மோடி படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் செய்த விவகாரம் தொடர்பாக 4 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

நாடாளுமன்ற 17-வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 18-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு வெளியான மார்ச் 10-ம் தேதி முதல்  நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

election commission

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்த சூழலில் அரசின் நலத் திட்டங்களை விளம்பரப்படுத்தக் கூடாது. எனினும், உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி ரயில் நிலையத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் மத்திய அரசின் நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தும் டிக்கெட்டுகள் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மோடியிடன் படம் இடம்பெற்றுள்ள ரயில் பயணச்சீட்டுகள், தேநீர் கோப்பைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மோடியின் புகைப்படத்துடன் ரயில் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

modi photo rail ticket

இந்த விவகாரம் தொடர்பாக புகார் எழுந்த நிலையில், ரயில்வே ஊழியர்கள் 4 பேரை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறுகையில், பிரதமர் புகைப்படம் கொண்ட இந்த டிக்கெட்டுகள் முன்னதாக அச்சடிக்கப்பட்டவை. தற்போது அவை பயன்படுத்தப்படாமல் வேறு டிக்கெட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஓய்வு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பிய ஊழியர்கள், தவறுதலாக பழைய பேப்பர் ரோலை எடுத்து அதில் டிக்கெட் அச்சிட்டு கொடுத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.

இதையும் வாசிங்க

அரசியல் கட்சி தலைவர்கள் கருத்துக்கு தேர்தல் ஆணையம் தடை!