பிரதமர் மோடி ஒரு மாமனிதர் – அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

 

பிரதமர் மோடி ஒரு மாமனிதர் – அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்

பிரதமர் மோடி ஒரு மாமனிதர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

வாஷிங்டன்: பிரதமர் மோடி ஒரு மாமனிதர் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

சமீபத்தில் இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இதனால் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு இன்னும் பலம் பெற்றுள்ளது.  இந்த நிலையில் தெற்குக் கரோலினா மாநிலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அதிபர் டிரம்ப் இந்தியப் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகவும், தமது பேச்சைக் கேட்க மாபெரும் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ttn

இந்திய மக்கள் பிரதமர் மோடி மீது பேரன்பு கொண்டிருப்பதாகவும், அதேபோல அமெரிக்கா மற்றும் அதன் மக்கள் மீதும் இந்தியர்கள் அன்பு வைத்திருப்பதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். மேலும் அமெரிக்கா நாடு சுமார் 35 கோடி மக்கள் தொகையை கொண்டிருப்பதாகவும், ஆனால் இந்தியா சுமார் 130 கோடி மக்கள் தொகையை கொண்டிருப்பதாகவும் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.