பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

 

பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி இன்று சந்திக்க இருக்கிறார்.

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் பழனிசாமி இன்று சந்திக்க இருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கடந்த மாதம் 30-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி   அனுமதி கோரியிருந்தார். ஆனால் அவருக்கு நேரம் ஒதுக்கப்படாமல் இருந்தது. அதிமுக மீது பாஜக அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால்தான் அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து பிரதமரை சந்திக்க முதல்வர் பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டதால் நேற்று மாலை அவர் டெல்லி புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் அவர் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது, ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசுவார் என தெரிகிறது.

மேலும், டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு குறித்தும் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி குறித்தும் விவாதிப்பார் எனவும் தெரிகிறது.