பிரதமர் மோடியின் மகளிடம் கொள்ளை! பிரபல ஹோட்டலில் தவிப்பு!

 

பிரதமர் மோடியின் மகளிடம் கொள்ளை! பிரபல ஹோட்டலில் தவிப்பு!

சீன அதிபருடனான சந்திப்பிற்காக சென்னை மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் மோடி வந்திருந்து, அதிகாலை வாக்கிங் போன சமயத்தில் குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்து கொண்டிருந்தார் அல்லவா? அந்த நேரத்தில் தான் அவரது சகோதரரின் மகளான தமயந்தி பென் மோடி, வழிப்பறி கொள்ளையர்களிடம் பணத்தையும், விமான பயணத்திற்கான ஆவணங்களையும் பறிகொடுத்திருக்கிறார்.

சீன அதிபருடனான சந்திப்பிற்காக சென்னை மாமல்லபுரத்திற்கு இந்திய பிரதமர் மோடி வந்திருந்து, அதிகாலை வாக்கிங் போன சமயத்தில் குப்பைகளை எல்லாம் சுத்தம் செய்து கொண்டிருந்தார் அல்லவா? அந்த நேரத்தில் தான் அவரது சகோதரரின் மகளான தமயந்தி பென் மோடி, வழிப்பறி கொள்ளையர்களிடம் பணத்தையும், விமான பயணத்திற்கான ஆவணங்களையும் பறிகொடுத்திருக்கிறார்.  

pen modi

இன்று காலையில் அமிர்தசரஸில் இருந்து டெல்லி வந்திருந்த தமயந்தி, குஜராத்தி சமாஜ் பவன் ஓட்டலில் தங்குவதற்காக ரூம் எடுத்திருந்தார். இந்த பகுதியில் தான் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட நிறைய பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகளும் அமைந்துள்ளன. அவர் ஓட்டலின் வாசலுக்கு வந்த சமயம் பார்த்து, பின்னாலேயே இரு சக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மோடியின் மகள் வைத்திருந்த பணப்பையை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பி சென்றார்கள். பறிகொடுத்த பையில் 56 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன்கள் மற்றும் விமான பயணம் மேற்கொள்வதற்கான ஆவணங்கள் உள்ளிட்டவை இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். நாட்டின் பிரதமரின் மகளிடமே அதுவும் தலைநகரில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது