பிரசாதமாக லட்டு தரப்படும் என அறிவித்துவிட்டு ஏமாற்றிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்! 

 

பிரசாதமாக லட்டு தரப்படும் என அறிவித்துவிட்டு ஏமாற்றிய மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்! 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் லட்டு வழங்கப்படும் என்ற முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீபாவளி முதல் லட்டு வழங்கப்படும் என்ற முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் லட்டை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் தீபாவளி நாளிலிருந்து உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் சில நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட்டது. 

madurai

இதனை தொடர்ந்து லட்டு தயாரிப்பு மற்றும் இயந்திரங்களுக்கான ஒப்பந்தம் விடப்பட்டது. இந்நிலையில் தூய்மையான முறையில் லட்டுகளை தயாரிப்பதற்காக இயந்திரம் வாங்க வேண்டியது உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் வழங்க முடியாது என்பதால் வேறொரு தேதியில் லட்டு வழங்குவதற்கான பணிகள் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தின் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மதுரை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.