பியூட்டி பார்லரில் பெண்ணை தாக்கியவரை மீண்டும் கட்சியில் சேர்த்தது திமுக

 

பியூட்டி பார்லரில் பெண்ணை தாக்கியவரை மீண்டும் கட்சியில் சேர்த்தது திமுக

பியூட்டி பார்லரில் பெண்ணை கொடூரமாக தாக்கிய செல்வகுமாரை திமுக மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டது.

பெரம்பலூர்: பியூட்டி பார்லரில் பெண்ணை கொடூரமாக தாக்கிய செல்வகுமாரை திமுக மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டது.

பெரம்பலூரில் பியூட்டி பார்லர் நடத்தி வருபவர் சத்யா. இவருக்கு பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருடன் நட்பு ரீதியான பழக்கம் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனிடையே சத்யாவை அவரது பார்லருக்குள்ளே வைத்து திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார் மிக கொடூரமாக தாக்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை அறிவித்தது.

இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செல்வகுமார் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுகிறார் என திமுக  தலைமை அறிவித்துள்ளது. மேலும், பெரம்பலூர்  பியூட்டி பார்லர் விவகாரம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலினிடம் செல்வகுமார் மன்னிப்பு கேட்டதாகவும் எனவே அவர் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுகிறார் எனவும் அறிவித்துள்ளது.