பிடிக்காதவர்கள் ட்விட்டரில் என்னை பின் தொடர வேண்டாம் – சேரன் அதிரடி!

 

பிடிக்காதவர்கள் ட்விட்டரில் என்னை பின் தொடர வேண்டாம் – சேரன் அதிரடி!

என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம் என இயக்குநர் சேரன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம் என இயக்குநர் சேரன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் தமிழ் 3’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார் சேரன். பிக் பாஸ் வீட்டில் 90 நாட்கள் கடந்த நிலையில் போட்டியிலிருந்து வெளியேறினார். வெற்றி இயக்குநராக  வலம் வந்த இவர், பொருளாதார நெருக்கடி காரணமாக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் என கூறப்பட்டது. 

வீட்டிலிருந்த அனைவருடனும் இணக்கமாக இருந்த அவர், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவை மகளாக கருதிவந்தார். லாஸ்லியாவும் சேரனை, ‘சேரப்பா’ என்றே அழைத்து வந்தார். ஆனால் லாஸ்லியா, சக போட்டியாளரான கவினுடன் பேசுவதை சேரன் விரும்பவில்லை. இது கவின் – லாஸ்லியா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதனால் சமூக வலைதளங்களில் சேரனுக்கு எதிரான கருத்துகளை, அவர்கள் பதிவிட்டு வந்தனர். 

cheran tweet

இந்நிலையில் இயக்குநர் சேரன், அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “நான் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பேசிய கருத்துக்கள் காண்பித்த உணர்வுகள் யாரையேனும் காயப்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.. இப்போதும் புரிந்துகொள்வீர்கள் என நினைத்தே சொல்கிறேன்.. இதற்கு மேலும் என்னை பிடிக்காதவர்கள் என்னை பின்தொடர(follow)வேண்டாம்.. மிக்க நன்றி” என பதிவிட்டுள்ளார்.