பிக் பாஸ் 3:  ஐந்தாவது போட்டியாளராக வெளியேறினார் நியூட்ரல் ரேஷ்மா! 

 

பிக் பாஸ் 3:  ஐந்தாவது போட்டியாளராக வெளியேறினார் நியூட்ரல் ரேஷ்மா! 

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து ஐந்தாவது போட்டியாளராக நேற்று ரேஷ்மா வெளியேறினார். 

பிக் பாஸ் 3:  ஐந்தாவது போட்டியாளராக வெளியேறினார் நியூட்ரல் ரேஷ்மா! 

சென்னை: பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து ஐந்தாவது போட்டியாளராக நேற்று ரேஷ்மா வெளியேறினார். 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்தியா மற்றும் மீரா மிதுன் ஆகியோர் வெளியேறினர்.
அவர்களைத் தொடர்ந்து கடந்த வாரம் எலிமிநேஷனில் அபிராமி, சாக்ஷி, கவின், ரேஷ்மா, மதுமிதா ஆகிய 5 பேர் நாமினேட் ஆகினர். 

 பிக் பாஸ் சீசன் 3 தொடங்கியதிலிருந்து வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் நியூட்ரலாக கருத்துக் கூறியவர் ரேஷ்மா. கடந்த வாரம் சேரன் மற்றும் முகன், ரேஷ்மாவை நாமினேட் செய்தனர். இந்த நிலையில் தற்போது  நாமினேட் ஆன முதல் எவிக்‌ஷனிலேயே ரேஷ்மா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். 

என்ன தான் மக்கள் வாக்கு அளித்தாலும் பிக் பாஸ் அவர்களுக்குத் தேவைப்படத்தை ஆட்களையே வெளியேற்றுகிறது என்பதற்கான சரியான உதாரணம் நேற்றைய நாமினேஷன் தான். ரேஷ்மாவின் எவிக்‌ஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.