பிக் பாஸ் 2: மக்களோடு விளையாடி பாப்போமா? ஐஸ்வர்யாவுக்கு சவால்விடும் ரித்விகா!

 

பிக் பாஸ் 2: மக்களோடு விளையாடி பாப்போமா? ஐஸ்வர்யாவுக்கு சவால்விடும் ரித்விகா!

சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரத்துக்கான நாமினேஷன் வித்தியாசமான முறையில் ஒரு இருட்டு அறைக்குள் நடத்தப்படுகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த வாரத்துக்கான தலைவராக யாஷிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த வாரத்துக்கான எவிக்‌ஷன் நாமினேஷன் பரபரப்பாக நடைபெறுகிறது.

 

இதில் ஐஸ்வர்யாவை போட்டியாளர்கள் டார்கெட் செய்வது போன்று புரொமோ வீடியோக்களில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரொமோ வீடியோவில், மக்களோடு ஒரு முறை விளையாடிப் பார்ப்போமா என ரித்விகா ஐஸ்வர்யாவுக்கு சவால்விடுவது போல் காட்சிகள் உள்ளன.

பிக் பாஸ் வீட்டில் மற்றவர்களைவிட குறைவாக வேலை செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறதா என ரித்விகா கேட்ட கேள்விக்கு மும்தாஜ் சற்றும் யோசிக்காமல் இல்லை என கூறுகிறார். அவரை தொடர்ந்து ஐஸ்வர்யா குறித்து மும்தாஜிடம் பாலாஜி கேள்விகளை கேட்கிறார். அதற்கு சற்று கோபமாக மும்தாஜ் பதிலளிப்பதால் மும்தாஜ் ஒரு டிராமா குயீன் தான் என்பதை போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் எண்ணும் அளவிற்கு வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

 

பிக் பாஸ் 2: மக்களோடு விளையாடி பாப்போமா? ஐஸ்வர்யாவுக்கு சவால்விடும் ரித்விகா!

 

இறுதியாக ஐஸ்வர்யாவிடம் நேரடியாகவே ரித்விகா சவால் விடுகிறார். நாமினேஷனில் இருந்து தப்பிக்காமல் இந்த ஒரு முறை மக்களோடு விளையாடி பார்க்கலாமா என கேட்கிறார். ரித்விகாவின் சவாலை ஐஸ்வர்யா ஏற்றதையடுத்து, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் களேபரம் களைக்கட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.