பிக் பாஸ் 2: ஐஸ்வர்யாவை மனிதர்குல மாணிக்கமாக காட்ட பிக் பாஸ் மாஸ்டர் ப்ளான்!

 

பிக் பாஸ் 2: ஐஸ்வர்யாவை மனிதர்குல மாணிக்கமாக காட்ட பிக் பாஸ் மாஸ்டர் ப்ளான்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐஸ்வர்யாவின் ஆக்ரோஷத்தை காட்டிய பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்குள் அவரை அன்பானவளாக காட்ட திட்டமிட்டு வருகிறார்.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஐஸ்வர்யாவின் ஆக்ரோஷத்தை காட்டிய பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்குள் அவரை அன்பானவளாக காட்ட திட்டமிட்டு வருகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இறுதி வாரம் நடைபெற்று வருகிறது. 105 நாட்கள் நடக்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சி இந்த வாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. இதில் இறுதிப்போட்டியில் ஜனனி, ரித்விகா, விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யா ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

Biggbossfinals

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சாந்தமாக தெரிந்த ஐஸ்வர்யா, ‘ராணி மகாராணி’ டாஸ்க் முதல் பிக் பாஸ் வீட்டில் பல முறை தனது ருத்ரதாண்டவத்தை காட்டி மிரட்டியுள்ளார். ஐஸ்வர்யாவின் ஆக்ரோஷத்தை விரும்பாத பலரும் அவரிடம் இருந்து சற்று விலகியே இருந்து வந்தனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியான நிலையில் ஐஸ்வர்யா எப்போது வெளியேறுவார் என்றே பலரும் எதிர்ப்பார்த்தனர்.

Aishwarya

உயிர் தோழி யாஷிகா மற்றும் பிக் பாஸின் அளவுகடந்த அன்பினால் தொடர்ந்து எவிக்‌ஷனில் இருந்து தப்பித்து வந்தார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் செயல்கள் எல்லையை மீறியதையடுத்து, கமல்ஹாசனே ரெட் கார்ட் காட்டி அவரை நாமினேஷனில் நிறுத்தினார். ஆனாலும், அவரை வெளியேற்ற பிக் பாஸுக்கு மனமில்லாததால் அற்ப காரணங்கள் காட்டி சென்றாயன் போன்ற அப்பாவிகள் வெளியேற்றப்பட்டனர்.

Aishwarya

இந்நிலையில், பிக் பாஸ் இறுதி போட்டியாளர்களுக்காக பிரசாரம் செய்த பிக் பாஸ் 1 மற்றும் சீசன் 2வில் இருந்து வெளியேறியவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பேசினர். இறுதி வாரத்திலாவது ஐஸ்வர்யாவை அன்பானவளாக கட்ட மேண்டும் என்று பிக் பாஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

Aishwarya

இதனால், ஐஸ்வர்யாவுக்கு கடந்த சில நாட்களாக வாக்குகள் குவிந்து வருவதாக தெரிகிறது. அப்படியானால், ஒரு வேளை பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஐஸ்வர்யாவை பிக் பாஸ் அறிவித்துவிடுவாரோ என்ற அச்சம் பிக் பாஸ் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.