பிக் பாஸ் வைஷ்ணவியை செக்ஸுக்கு அழைத்த லெஸ்பியன் பொண்ணு!

 

பிக் பாஸ் வைஷ்ணவியை செக்ஸுக்கு அழைத்த லெஸ்பியன் பொண்ணு!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான வைஷ்ணவியை ஓரின சேர்க்கை பெண் ஒருவர் உடலுறவுக்கு அழைத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமான வைஷ்ணவியை ஓரின சேர்க்கை பெண் ஒருவர் உடலுறவுக்கு அழைத்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உலகளாவிய மீ டூ பிரசாரத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். ஹாலிவுட்டை தொடர்ந்து இந்திய சினிமாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த விவகாரம் தற்போது தமிழ் திரையுலகிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான வைஷ்ணவி, ஓரின சேர்க்கை பெண் ஒருவர் தன்னை உடலுறவுக்கு அழைத்ததாக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பிரபலங்கள் மீது மீ டூ குற்றம்சாட்டி வரும் நிலையில், ஓரின சேர்க்கை பெண் மீது வைஷ்ணவி மீ டூ புகார் தெரிவித்துள்ளார்.

தாம்பரத்தை சேர்ந்த அந்த பெண், தான் உங்களுடைய தீவிர ரசிகை என்று உரையாடி, நாம் உடலுறவுக் கொள்ளலாமா என கேட்டுள்ளார். அந்த உரையாடலை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ள வைஷ்ணவி, சட்டப்பிரிவு 377 குற்றமில்லை என தீர்ப்பானது சரி தான். அதற்கு இத்தனை வேகமாக இருப்பது. என ட்வீட்டியுள்ளார்.