பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி வெளியிட்ட முதல் போஸ்ட் என்ன தெரியுமா? 

 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி வெளியிட்ட முதல் போஸ்ட் என்ன தெரியுமா? 

பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 56 நாட்களைக் கடந்துள்ளது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அபிராமி வெளியிட்ட முதல் போஸ்ட் என்ன தெரியுமா? 

பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 56 நாட்களைக் கடந்துள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இதில் இதுவரை பாத்திமா பாபு,  மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி அகர்வால் மற்றும் மதுமிதா ஆகியோர் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்டு எண்ட்ரியாக கஸ்தூரி மற்றும் வனிதா நுழைந்துள்ளனர். 

அதைத்தொடர்ந்து நேற்று அபிராமி அதிரடியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். எப்போதும் அழுது கொண்டே  இருக்கும் அபிராமி நேற்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் சமயத்தில் சந்தோஷமாக வெளியேறினார். 

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு அபிராமி முதல் முறையாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், ‘வந்து விட்டேன் பாரதி கண்ட புதிய பெண்ணாக நேர்கொண்ட பார்வையுடன். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி. என்னுடைய கனவு நிறைவேறிவிட்டது’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.