பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது ஆளாக காப்பாற்றப்பட்டாரா கவின்?  

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது ஆளாக காப்பாற்றப்பட்டாரா கவின்?  

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தொடங்கி ஒரு மாதத்தை எட்டியுள்ளது. நேற்று வார இறுதி நாள் என்பதால் கமல்ஹாசன் ஹவுஸ் மேட்ஸ்யுடன் விவாதித்தார். அதைத்தொடர்ந்து எலிமினேஷன் படலம் நடைபெற்றது. அதில் முதல் ஆளாக சேரன் காப்பாற்றப்பட்டார். 

அதைத்தொடர்ந்து இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் மீதமுள்ள அபிராமி, சாக்ஷி, கவின், சரவணன், மீரா ஆகியோர் உள்ளனர். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் கமல், ‘அபிராமி தொடர்ந்து நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார். சாக்ஷியும் அதே போல் உள்ளார் என்று சொல்ல’ உடனே சாக்ஷி, யாரு என்று கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுகிறார்’. 

அதைத்தொடர்ந்து ரசிகர்களிடம் யாரை காப்பாற்ற விரும்புகிறார்கள் என்று கேட்க, உடனே அனைவரும் கவின் என்றுகூறுகின்றனர். அதனால் இரண்டாவதாக ஆளாக இதில் கவின் காப்பாற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.