பிக் பாஸின் விதியை மீறிய ஷாக்ஸி! செட்டில்மெண்ட் வருவது டவுட்தான்!! 

 

பிக் பாஸின் விதியை மீறிய ஷாக்ஸி! செட்டில்மெண்ட் வருவது டவுட்தான்!! 

ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாச‌ன் தொகுத்து வழங்கி வருகிறார். 60 கேமராக்கள் இருக்கும் பிக்‌பாஸ் வீட்டில், போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு ஒன்றாக வசிக்க வேண்டும் என்பதே, அவர்களுக்‌கு வழங்கப்பட்டுள்ள டாஸ்க்.‌ அதில் பொதுமக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் வா‌ரம் ஒரு பங்கேற்பா‌ளர் பிக்பாஸ்‌ வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இந்நிலையில், சக போட்டியாளர்களுட‌ன் ஏற்பட்‌ட பிரச்னையால்‌ தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி, பிக்பாஸ் வீட்டில் இருந்து‌ அதிரடியாக வெளியேற்றப்பட்டார், நடிகை மதுமிதா. வெளியே சென்‌றவர் மீது தொலைக்காட்சி நிர்வாகம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தது. எஞ்சிய சம்பளத் தொகையை உடனடியாக கேட்கும் மதுமிதா, தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்பதே, அவர்களின் குற்றச்சாட்டு. அதற்கு விளக்கமளிக்கும் விதமாக சென்னை வளசரவாக்கத்தில் கடந்த ‌21ஆம் தேதி செய்தியாளர்களை‌ச் சந்தித்தார், மதுமிதா.‌ சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகம் தன் மீது பொய் புகார் அளித்திருப்பதாக கூறியது, இவ்விவகாரத்தின் பரபரப்பை அடுத்த கடத்திற்கு நகர்த்திச் சென்றது. மதுமீதா மீதான புகாரும், அதற்கான எதிர்வினையும் ஒருபுறமிருக்‌க, சென்னை ராயப்பேட்டையில் நேற்‌று கலைநிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில்‌, பிக்பாஸ் வீட்டி‌ல் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நடிகை சாக்ஷி, மாடல் அழகி மீரா மிதுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சாக்ஷி, மதுமிதா மீது சில விமர்சனங்களை முன்வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள், ஊடகங்களைச் சந்தித்தாலும், நிகழ்ச்சி தொடர்‌பாக எந்த தகவலையும் வெளியே தெரிவிக்கக்கூடாது என்ற விதிமுறைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்க, பொது வெளிக்கு வந்திருக்கும் இந்த விவகாரம், விவாதப்‌ பொருளாக மாறி இருக்கிறது. எனவே ஷாக்ஸி பிக்பாஸ் விதியை மீறியதாக கூறப்படுகிறது.