‘பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்ல தயார்’ : சொன்னது யார் தெரியுமா?

 

‘பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்ல தயார்’ : சொன்னது யார் தெரியுமா?

மக்கள் மனம் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் ஆரம்பமாகி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது

சென்னை:  பிக் பாஸ் சீசன் 3-இல் கண்டிப்பாகக் கலந்து கொள்வேன் என்று நடிகை யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளார். 

மக்கள் மனம் கவர்ந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் ஆரம்பமாகி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்த முறை வழக்கத்தை விட டிஆர்பியை ஏற்ற திட்டமிட்டுள்ள பிக் பாஸ் டீம் மோசடி புகாரில் சிக்கியுள்ள மாடல்  அழகி மீரா மிதுனை களமிறக்கிக் கூடுதல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்படி விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் முந்தைய பிக் பாஸ் போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருவார்களா? என்ற எதிர்பார்ப்பும்  எழுந்துள்ளது. 

yashika

இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளரும் நடிகையுமான யாஷிகாவிடம் நீங்கள் மீண்டும் பிக்பாஸில் கலந்து கொள்வீர்களா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவரோ, ‘கண்டிப்பாக செல்வேன்.ஆனால்  போட்டியாளராக அல்ல. விருந்தினராகச் செல்வேன். ஏனென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியால் தான் நான் இப்போது இங்கு இருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

yashika

முன்னதாக இந்த முறை நடிகர் சரவணனை பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்துச் சென்றது முந்தைய பிக் பாஸ்  போட்டியாளர் கஞ்சா கருப்பு தான். அதேபோல் ஹரிஷ் கல்யாணும் சீசன் 3 ஆரம்ப நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அதனால் இனிவரும் காலங்களில் முந்தைய போட்டியாளர்களை நாம்  மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் காணலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.