பிக்பாஸ் நிகழ்ச்சியை பரப்பரப்பாக்க விஜய் டிவி செய்யும் தந்திர வேலை இது! – மதுமிதா அதிரடி

 

பிக்பாஸ் நிகழ்ச்சியை பரப்பரப்பாக்க விஜய் டிவி செய்யும் தந்திர வேலை இது! – மதுமிதா அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்க கொடுக்கப்பட்ட புகாராக இருக்கலாம் என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியை பரப்பரப்பாக்க விஜய் டிவி செய்யும் தந்திர வேலை இது! – மதுமிதா அதிரடி

பிக்பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்க கொடுக்கப்பட்ட புகாராக இருக்கலாம் என நடிகை மதுமிதா தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து, பிக் பாஸ் வீட்டின் விதிமுறைகளை மீறியதற்காக வெளியேற்றப்பட்ட மதுமிதா மீது  தொலைக்காட்சி தரப்பிலிருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. காவல் நிலையத்தில் ‘முறையாக சம்பளம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’ என மதுமிதாவின்மீது புகார் அளிக்கப்ட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இன்னிலையில், மதுமிதா அந்த புகாரை நிராகரித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை மதுமிதா, “நேற்று என்மீதான புகாரை மீடியாமூலமே பார்த்து தெரிந்து கொண்டேன். விஜய் டிவி நிர்வாகம் என் மீது அளித்துள்ள புகார் முற்றிலும் பொய்யானது. எனக்கு வர வேண்டிய தொகைக்கு என் கணவர் மூலமாக இன்வாய்ஸை விஜய் டிவியில் கொடுத்தேன். இந்த பிரச்னையை பிக்பாஸ் நிர்வாகமும் கமலும்தான் தீர்த்து வைக்க வேண்டும். நிலுவை தொகையை தருவதாக கூறிய பின் என் மீது ஏன் இந்த புகாரை கொடுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை. இன்னும் விஜய் டிவியின் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நான் செயல்பட்டு வருகிறேன். நான் விஜய் டிவி நிர்வாகி டீனாவை மிரட்டினேன் என்ற புகார் பொய். நான் கை அறுத்துக் கொண்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பி இருந்தால் என் மீதான நியாயம் புரிய வரும். மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.