பிக்பாஸ் சினேகனுக்கு அரசியலில் அடித்த ஜாக்பாட்!
Nov 2, 2019, 19:25 IST1572702929000
கவிஞர் சினேகனுக்கு மக்கள் நீதி மய்ய கட்சியில் புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் கவிஞர் சினேகன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவிஞர் ஸ்னேகன், கமல்ஹாசனுடன் நெருக்கமானதை அடுத்து அவர் கட்சி ஆரம்பித்தவுடன் அக்கட்சியில் இணைந்து முக்கிய நிர்வாகியாக வலம் வருகிறார். இந்நிலையில் கவிஞர் சினேகனுக்கு கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் என்ற பொறுப்பை கமல் அளித்துள்ளார். மேலும் மக்களுக்கான நல்லாட்சி கனவை நிறைவேற்றிட உழைக்கும்படி கமல் கேட்டுக்கொண்டுள்ளார்.
நற்பணி இயக்க மாநில செயலாளராக தங்கவேலு, வழக்கறிஞர் அணி மாநில செயலாளராக குருவைய்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.