பிகில் பட ஷூட்டிங்கில் காயமடைந்த எலெக்ட்ரீஷியன் மரணம்! 

 

பிகில் பட ஷூட்டிங்கில் காயமடைந்த எலெக்ட்ரீஷியன் மரணம்! 

விஜய்யின் பிகில் பட ஷூட்டிங் சமயத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கியவர் நேற்று மாலை மரணமடைந்தார்.

சென்னை: விஜய்யின் பிகில் பட ஷூட்டிங் சமயத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கியவர் நேற்று மாலை உயிரிழந்தார்.

மூன்றாவது முறையாக அட்லீ- விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் படம் பிகில். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. கால் பந்தை மையமாகக் கொண்ட உருவாகிவந்த இந்த படத்தின் செட் ஈ.வி.பி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டு வந்தது. 

அப்போது ஏப்ரல் 24ஆம் தேதியன்று இரவு பணி நடைபெற்று வந்த சமயத்தில் சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் செல்வராஜ்(வயது 52) என்பவர் மீது 100 அடி உயரத்தில் கிரேனில் கட்டப்பட்டு இருந்த மின்விளக்கு கழன்று தலையில் விழுந்துவிட்டது. 

இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே மயங்கினார். உடனடியாக போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் செல்வராஜ் நேற்று மாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த தகவலைக் கேட்ட பின்பு படத்தின் விஜய், அட்லீ மற்றும் படக்குழுவைச் சேர்ந்த சிலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.