பிகில் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம்! 

 

பிகில் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு கடிதம்! 

பிகில் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

பிகில் படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

BIGIL

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு  ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.  

bigil

தீபாவளிக்கு வெளியாக இருக்கும் பிகில் மற்றும் கைதி படங்களுக்கு சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் மேலும், கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்க மாட்டோம் என உறுதி அளித்தால் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் கல்பாத்தி அகோரம், பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரவேண்டும் எனக்கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.