பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட் செல்லும்போது கடத்தல் ! மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்த கொடூரன்கள்

 

பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட் செல்லும்போது கடத்தல் ! மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து தீ வைத்த கொடூரன்கள்

பாலியல் வன்புனர்வால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டுக்கு செல்லும்போது கடத்தப்பட்டு மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் தான் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் தந்த பு2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் ஒருவருக்கு ஜாமின் கிடைத்துவிட்ட நிலையில் மற்றொருவர் போலீசாரிடமிருந்து தப்பி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பாலியல் வன்புனர்வால் பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டுக்கு செல்லும்போது கடத்தப்பட்டு மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் தான் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பெண் தந்த   புகாரால் 2 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆனால் ஒருவருக்கு ஜாமின் கிடைத்துவிட்ட நிலையில் மற்றொருவர் போலீசாரிடமிருந்து தப்பி விட்டார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

up

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக அந்த  பெண் நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து  அவரை கடத்தி சென்றது. பின்னர் ஆள்அரவமற்ற இடத்திற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று 5 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்தப் பெண் மயங்கியுள்ளார். இதையடுத்து 5 பேரும் சேர்ந்து அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். தற்போது அந்தப் பெண் 70 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த 5 பேரில் ஏற்கனவே அந்த பெண்ணை பாலியல் பலாத்கரம் செய்தவனும் ஒருவன். 

மருத்துவமனையில் பெண் வாக்குமூலத்தை எடுத்துக்கொண்ட போலீசார் 5 பேரில் 3 பேரை கைது செய்துவிட்டனர். மேலும் 2 பேர் தப்பியுள்ளனர். 

up

தெலுங்கானா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்காத நிலையில், மற்றொரு பெண்ணும் எரிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.