பாலியல் வன்கொடுமை முயற்சியின் போது படுகாயமடைந்த மாணவி உயிரிழப்பு

 

பாலியல் வன்கொடுமை முயற்சியின் போது படுகாயமடைந்த மாணவி உயிரிழப்பு

தருமபுரி: பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது படுகாயமடைந்த பிளஸ் 2 மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கடந்த இரு தினங்களுக்கு முன் இரவு நேரத்தில் தனியாக சென்ற பிளஸ் 2 மாணவியை மர்ம நபர்கள் சிலர் பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அவர்களின் பிடியில் இருந்து தப்பிக்கப் போராடிய மாணவியை அக்கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. பின்னர், அங்கிருந்து அந்த மாணவி தப்பித்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து, பலத்த காயமடைந்த மாணவி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்யக்கோரி உறவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.