பாலியல் வன்கொடுமை செய்ய வந்த நபரின் நாக்கை கடித்து துப்பிய பெண்

 

பாலியல் வன்கொடுமை செய்ய வந்த நபரின் நாக்கை கடித்து துப்பிய பெண்

தென்னாப்பிரிக்காவில் பாலியல் வன்கொடுமை செய்ய வந்த நபரின் நாக்கை பெண் மருத்துவர் ஒரு கடித்ததில் நாக்கு துண்டான சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் பாலியல் வன்கொடுமை செய்ய வந்த நபரின் நாக்கை பெண் மருத்துவர் ஒரு கடித்ததில் நாக்கு துண்டான சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் நோயாளி போல் நடித்து மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு நபர், தூங்கிக் கொண்டிருந்த பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த பெண் மருத்துவர் தன்னை உதட்டுடன் உதடு முத்தமிடவந்த அந்த நபரின் நாக்கை பலமாக கடித்திருக்கிறார். அவர் கடித்த வேகத்தில், அந்த நபரின் நாக்கே துண்டாகி விட்டிருக்கிறது. இரத்தம் சொட்ட சொட்ட நின்ற அந்த நபருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அந்த பெண் மருத்துவர் அளித்த புகாரின்பேரில் அந்த நபர் கைது செய்யப்பட்டார். 

தென்னாப்பிரிக்கப் பெண்களில் 40 சதவிகிதம் பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது மூன்றில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் நான்கில் ஒரு பங்கு ஆண்கள் யாராவது ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது.